ஜெயம் தங்கராஜா

சசிச

திருநங்கை

தள்ளிவைத்து பிறிம்பு காட்டும் உலகம்
எள்ளி நகையாடி ஒட்டாதே விலகும்
அள்ளி அரவணைத்த அன்னையும் இல்லை
சொல்லவோ வேதனை தந்தையும் இல்லை

மரணத்தை உண்டுபண்ணும் கிருமிகளா இவர்கள்
மனிதரென கருதாமல் இடையிலென்ன சுவர்கள்
சுரப்பதன் குறைபாட்டால் அர்த்தமற்றுப் போவதா
பிரம்மனது படைப்பொன்று இப்படியும் ஆவதா

சரிசெய்ய முடியாத ஆண்டவன் பிழையிது
பரிதாபம் தேடுகின்ற புதுப்பாலின் நிலையிது
ஆணில் பாதியுமாய் பெண்ணில் பாதியுமாய்
காணும் காட்சிகளில் கவலைகளே மீதியுமாய்

உள்ளத்து ஆசைகள் இவர்களிற்கும் உண்டு
வெள்ளை மனங்கொண்ட அவர்களைக் கண்டு
உறவாகி பாசத்தைப் பொழிவது என்று
உருவாகும் நல்ல சமுதாயம் அன்று

ஜெயம்
04-07-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading