ஜெயம் தங்கராஜா

சசிச

திருநங்கை

தள்ளிவைத்து பிறிம்பு காட்டும் உலகம்
எள்ளி நகையாடி ஒட்டாதே விலகும்
அள்ளி அரவணைத்த அன்னையும் இல்லை
சொல்லவோ வேதனை தந்தையும் இல்லை

மரணத்தை உண்டுபண்ணும் கிருமிகளா இவர்கள்
மனிதரென கருதாமல் இடையிலென்ன சுவர்கள்
சுரப்பதன் குறைபாட்டால் அர்த்தமற்றுப் போவதா
பிரம்மனது படைப்பொன்று இப்படியும் ஆவதா

சரிசெய்ய முடியாத ஆண்டவன் பிழையிது
பரிதாபம் தேடுகின்ற புதுப்பாலின் நிலையிது
ஆணில் பாதியுமாய் பெண்ணில் பாதியுமாய்
காணும் காட்சிகளில் கவலைகளே மீதியுமாய்

உள்ளத்து ஆசைகள் இவர்களிற்கும் உண்டு
வெள்ளை மனங்கொண்ட அவர்களைக் கண்டு
உறவாகி பாசத்தைப் பொழிவது என்று
உருவாகும் நல்ல சமுதாயம் அன்று

ஜெயம்
04-07-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading