புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 663

தன்னை அறிந்தவன்

வாழ்க்கைப் பயணம் செல்கின்றது அழகாக
நாளும் புதுப்புது அனுபவம் தெளிவாக
வேகத்தடைகள் போடவென சில நிகழும்
கடுமையைக் கடந்துவிட மகிழ்ச்சியில் முற்றும்

போனதும் வந்ததும் இனி வரப்போவதும்
இன்பதுன்பத்தை இரண்டறக் கலந்தே தரும்
இருப்பினும் பூ வாசமாகவே பூக்கின்றது
புரிதலால் புதிதான மதிப்பான வாழ்க்கை

எவ்வாறு பேசுவதென காலந்தாழ்த்தியே கற்றது
மெளனம் நிறைய சந்தர்ப்பங்களில் பாதுகாத்தது
சூழ்நிலையை மாற்றப்போய் பட்டதெல்லாம் அவமானம்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவதென முடிவு

அனுபவம் ஒருவரை எப்படியும் மாற்றிவிடும்
சரிந்து விழாமல் வாழவும் தெரிந்தது
வந்து சேர்வதெல்லாம் வந்தே சேரும்
விரும்பிய வாழ்க்கையை தேடியே நகர்வு

பிடிக்காத மனிதர்கள் பலரைச் சந்திப்பு
பிடித்த மனிதர்களுடன் பிடிப்போடு பேச்சு
தன்னையே தான் அறிந்த ஓர்நிலை
சிக்கத்தான் வைத்திடுமா துன்ப வலை

ஜெயம்
14-09-2023

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading