ஜெயம் தங்கராஜா

சசிச

தலைப்பு

இற்றை வரைக்கும் புதியதோர் தலைப்பு
அற்புதமாய் தொடருது கவிஞர்கள் உழைப்பு
உற்பத்தி செய்வதில் நானாநீயா போட்டி
சற்றும் எதிர்பாராத திறமைகளைக் காட்டி

வற்றிவிடவில்லை  பாவலர் படைத்திடும் பாக்கள்
அற்ப வாழ்வற்ற அதிசயப் பூக்கள்
கற்பனையோ பட்டவையோ செவ்வாயின் மாலை
கற்றவர்கள் அறிவினால் நிரம்பிடும் வேளை

கொடுத்துவிட  தலைப்பை செவ்வாய் அன்றே
அடுத்த நொடி படைத்திடுவார் நன்றே
எப்படியென வியந்துமே கேட்போர் பலர்
இப்படியாகப் படைத்துமே புகழடைந்தார் சிலர்

கருத்தரித்தது பிரசவமானது இதன் கீழ்
உருவாக்கி பெருமை கொண்டது வெற்றுத்தாள்
அப்பாடா வார்த்தைகளை அடுக்கியொரு விளையாட்டு
முப்பொழுதும் தப்பிடாது தமிழின் தாலாட்டு

ஜெயம்
16-09-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading