ஜெயம் தங்கராஜா

சசிச

எச்சம்

களம் பலகண்டதொரு இனத்தின் எச்சம்
தளர்ந்துவிடுமோ தடையுடைத்து அடையும் உச்சம்
கனவது இன்னும் விழிகளில் மிச்சம்
மனத்தீ அணைந்நுவிடும் அடையும் பட்சம்

மைந்தராய் கிடைத்தாரே எமக்கு அருளென்று
சிந்தினாரே குருதியை அதற்கும் பொருளுண்டு
சிந்தையிலே நிறைந்தவர் இவர்போல் எவருண்டு
உந்தனை வணங்கிடுவோம் தமிழ் கொண்டு

சீவனை விட்டாலும் பாசபந்த சீவியம்
தேவராய் நடமாடி காத்துநின்ற காவியம்
சாவதற்கு துணிந்தவர்கள் துடித்துவிடும் ஆவியும்
காவல்செய்தார் திசைகளெல்லாம் ஏம சாமமாகியும்

பிறந்த மண்ணை மேன்மையாக்கிய சொந்தம்
இறப்பை அங்கு காணிக்கையாக்கிய பந்தம்
சிறந்த கொள்கை அறத்துடனான யுத்தம்
மறக்குமா தலைமுறை விரைவிலுணரும் புத்தம்

ஜெயம்
25-11-2023

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading