சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

எச்சம்

களம் பலகண்டதொரு இனத்தின் எச்சம்
தளர்ந்துவிடுமோ தடையுடைத்து அடையும் உச்சம்
கனவது இன்னும் விழிகளில் மிச்சம்
மனத்தீ அணைந்நுவிடும் அடையும் பட்சம்

மைந்தராய் கிடைத்தாரே எமக்கு அருளென்று
சிந்தினாரே குருதியை அதற்கும் பொருளுண்டு
சிந்தையிலே நிறைந்தவர் இவர்போல் எவருண்டு
உந்தனை வணங்கிடுவோம் தமிழ் கொண்டு

சீவனை விட்டாலும் பாசபந்த சீவியம்
தேவராய் நடமாடி காத்துநின்ற காவியம்
சாவதற்கு துணிந்தவர்கள் துடித்துவிடும் ஆவியும்
காவல்செய்தார் திசைகளெல்லாம் ஏம சாமமாகியும்

பிறந்த மண்ணை மேன்மையாக்கிய சொந்தம்
இறப்பை அங்கு காணிக்கையாக்கிய பந்தம்
சிறந்த கொள்கை அறத்துடனான யுத்தம்
மறக்குமா தலைமுறை விரைவிலுணரும் புத்தம்

ஜெயம்
25-11-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading