புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

வேலி அடைப்போம்

பாவங்களின் ஆக்கிரமிப்பால் வாழ்க்கை தோற்கின்றது
சாபங்கள் தனைவாங்கி ஆயுள் தேய்கின்றது
தெரிந்தோ தெரியாமலோ ஒட்டிவிட்டே மனத்தோடு
புரிந்தோ புரியாமலோ குட்டிபோடும் தினத்தோடு

விலங்குகளுக்கு மேலென சொல்லுகின்ற இனம்
விலங்காகி சிதைத்திடும் குரூர குணம்
எல்லைமீறிய சுதந்திரத்தால் நினைத்தவைகளைச் சாதிப்பு
எள்ளளவும் தயங்காது இழைத்துவிடும் பாதிப்பு

இப்படியே போகுமென்றால் செத்துவிடும் நீதி
எப்படியோ போய்விட்டது வாழ்க்கையில் சரிபாதி
கடிவாளமில்லா குதிரையாக எங்கெங்கும் ஓட்டம்
அடிபட்டு எப்போது காணுமிங்கு மாற்றம்

அடைப்போமே மனதைச்சுற்றி வைராக்கிய வேலி
உடைத்துக்கொண்டே பாவமதன் ஆட்சி நாற்காலி
நுழைந்துமே ஆட்டிப்படைக்காது சாத்தான்கள் இனியும்
பிழையில்லா செயல்களுக்கே உள்ளமங்கே பணியும்

ஜெயம்
10-03-2024

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading