சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

வேலி அடைப்போம்

பாவங்களின் ஆக்கிரமிப்பால் வாழ்க்கை தோற்கின்றது
சாபங்கள் தனைவாங்கி ஆயுள் தேய்கின்றது
தெரிந்தோ தெரியாமலோ ஒட்டிவிட்டே மனத்தோடு
புரிந்தோ புரியாமலோ குட்டிபோடும் தினத்தோடு

விலங்குகளுக்கு மேலென சொல்லுகின்ற இனம்
விலங்காகி சிதைத்திடும் குரூர குணம்
எல்லைமீறிய சுதந்திரத்தால் நினைத்தவைகளைச் சாதிப்பு
எள்ளளவும் தயங்காது இழைத்துவிடும் பாதிப்பு

இப்படியே போகுமென்றால் செத்துவிடும் நீதி
எப்படியோ போய்விட்டது வாழ்க்கையில் சரிபாதி
கடிவாளமில்லா குதிரையாக எங்கெங்கும் ஓட்டம்
அடிபட்டு எப்போது காணுமிங்கு மாற்றம்

அடைப்போமே மனதைச்சுற்றி வைராக்கிய வேலி
உடைத்துக்கொண்டே பாவமதன் ஆட்சி நாற்காலி
நுழைந்துமே ஆட்டிப்படைக்காது சாத்தான்கள் இனியும்
பிழையில்லா செயல்களுக்கே உள்ளமங்கே பணியும்

ஜெயம்
10-03-2024

Nada Mohan
Author: Nada Mohan