பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மாறுமோ மோகம்

மனதில் ஒலித்திடும் தீய ஓசை
குணத்தை அழித்திடும் அதீத ஆசை
மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி
பேயாக ஆட்டம்போட்டு கண்டிடுமே வளர்ச்சி

பற்று என்பது விருப்பத்தின் வெளிப்பாடு
சற்று அதிகமானால் அதுவே குறைபாடு
சிலப்பதிகாரத்தில் கோவலனும் வேட்கையின் வேகத்தால்
பலரின் வாழ்க்கை சரிந்ததுவும் மோகத்தால்

பற்பல மோகங்கள் மனிதர்களைக் கவரும்
பற்றை தாண்டிப்போய் வெறியாகிவிடார் சிலரும்
எத்தனை மோகங்கள் என்னென்ன வடிவில்
அத்தனையும் ஆட்டிவிட்டே வெளியேறும் முடிவில்

பெண்மீது கொண்டோர்கள் முடிந்திட்ட கதையும்
மண்மீது கொண்டோர் மண்ணுக்குள் புதையும்
வரலாற்று நிகழ்வுகள் ஆயிரம் உண்டு
உருண்டன பேரசுகள் பேராசைகளால் அன்று

ஆடவர் தேகத்தினவுக்காக இரையாகும் பெண்மை
ஊடகங்களில் அன்றாட செய்தியாகின்றது உண்மை
மோகநிலையற்ற சமுதாயம் உருவாகுவது எப்போது
சோகமேயின்றி நடைபோடாதோ வாழ்க்கை அப்போது

ஜெயம்
23-03-2024

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading