பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச
பாமுகமே வாழி

ஆக்கிவிட தூக்கிவிடும் எம்மவரின் தளம்
ஊக்கங்கொண்டோர் ஆக்கியங்கு கொண்டனரே வளம்
உண்மையில் சொல்லப்போனால் இன்னோர் தாய்நிலம்
என்றுமதன் அருகினிலே வாழ்க்கையின் குதூகலம்

மொழிப்பசி தீர்த்துமே அறிவூட்டும் அகம்
விழிகளுக்கு காட்சியாகி பாருலவும் பாமுகம்
இருபத்தேழு ஆண்டுகளாக மொழிக்கான பயணம்
உருவாகி பலரங்கே அடைந்துகொண்டார் பயனும்

சின்னஞ்சிறு பாலகரும் நுழைந்திடுவார் உற்சாகத்தோடு
எண்ணத்திலே மேன்மைகொண்டு வெளிவருவார் பகுத்தறிவோடு
சிந்தையிலே தெளிவுகொண்ட ஒருவரது நோக்கம்
வந்துகொள்ளும் தலைமுறையை இருக்கும்வரை காக்கும்

எழுதியெழுதி பலபேரும் பக்குவத்தை கொண்டார்கள்
தழுவிக்கொண்ட புகழதனால் முகவரியும் கண்டார்கள்
எத்தனையோ பேனாக்கள் மையிழந்து ஆயுளைத்தொலைத்தன
அத்தனையும் பாமுகத்தில் படைத்ததனால் விளைந்தன

கருத்துக்களை செவி குவிக்கும் அறிவொழியே
பொறுப்பேற்று வழிநடத்தும் பெருமகனார் தனிவழியே
தொடரட்டும் நின்பணி தமிழோடு எந்நாளும்
கடந்திடும் சந்ததிகள் வளமடையும் எதிர்காலம்

ஜெயம்
09-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading