நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச
வசந்தம்

வின் வீதியில் கதிரவன் உலா
மண் மீதினிலே உற்சாகத் திருவிழா
வசந்தம் வந்திங்கு புமியில் தவழும்
எண்ணத்துள் இனியில்லா புத்துணர்வும் தழுவும்

வாட்டமெல்லாம் நீங்கவே வந்ததொரு காலம்
மீட்டிக்கொண்டே மகிழ்ச்சியை விரைந்தெழுமே கோலம்
ஒளிக்கதிர்கள் மண்ணுலகில் புதிதாக நடைபோடும்
குளிரை குவலயத்துள் விடாது தடைபோடும்

இலையாடை உடுத்திக்கொள்ளும் நிர்வாண மரங்கள்
மலையெல்லாம் புதுத்தோற்றம் வசந்தகால வரங்கள்
பூக்களை பூமிசெய்து எழிலையும் பெருக்கும்
ஆக்கியே வளங்களை இயற்கையும் செழிக்கும்

வரவேண்டும் வரவேண்டும் வசந்தமும் தேடி
தரவேண்டும் தரவேண்டும் நன்மைகள் கோடி
இயற்கையோடு மானிடரும் வளமதனை சேர்ப்பாரே
இயன்றளவு வசதிகொண்டு பாடுகளைத் தீர்ப்பாரே

ஜெயம்
16-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

    Continue reading