மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச
வசந்தம்

வின் வீதியில் கதிரவன் உலா
மண் மீதினிலே உற்சாகத் திருவிழா
வசந்தம் வந்திங்கு புமியில் தவழும்
எண்ணத்துள் இனியில்லா புத்துணர்வும் தழுவும்

வாட்டமெல்லாம் நீங்கவே வந்ததொரு காலம்
மீட்டிக்கொண்டே மகிழ்ச்சியை விரைந்தெழுமே கோலம்
ஒளிக்கதிர்கள் மண்ணுலக வீதிகளில் விளையாடும்
குளிரும் ஓட்டம்பிடித்து மறைவிடத்தைத் தேடும்

இலையாடை உடுத்திக்கொள்ளும் நிர்வாண மரங்கள்
மலையெல்லாம் புதுத்தோற்றம் வசந்தகால வரங்கள்
பூக்களை பூமிசெய்து எழிலையும் பெருக்கும்
ஆக்கியே வளங்களை இயற்கையும் செழிக்கும்

வரவேண்டும் வரவேண்டும் வசந்தமும் தேடி
தரவேண்டும் தரவேண்டும் நன்மைகள் கோடி
இயற்கையோடு மானிடரும் வளமதனை சேர்ப்பாரே
இயன்றளவு வசதிகொண்டு பாடுகளைத் தீர்ப்பாரே

ஜெயம்
16-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading