மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

விடுமுறை

வந்ததே எதிர்பார்த்திருந்த குதூகல விடுமுறை
தந்ததே இன்பம் மகிழ்ச்சிக்கில்லை வரையறை
வருடத்தில் கிடைக்குமந்த நான்கு வாரங்கள்
உருவாக்கும் சுகங்களை நெஞ்சின் ஓரங்கள்

ஓடியோடியே செய்யும் ஓய்வில்லாத வேலை
கூடிப்பேசிட கண்டுபிடிக்கவில்லை வெறுமையான நாளை
அழுத்தங்களோ நாளுக்குநாள் கூடிக்கொண்டிருக்கும் வேளை
பளுவகற்றி பாதம்பதிக்க உருவானது சாலை

அதே இடம் அதே ஆட்கள்
இதே வாழ்வாகி கடந்திட்ட நாட்கள்
களைப்பாய் இருந்தாலும் சலிக்காது ஆட்டம்
விளைவுகள் எதிர்மறைதான் இருந்தாலும் ஓட்டம்

விடுகின்ற மூச்சை சரியாய்விடும் தினமிதுவே
எடுத்துவந்து நிம்மதியை கொடுத்துவிடும் மனமதுவே
இருந்தவிடம் விட்டு மாற்றிடத்திற்குப் பறந்து
திரும்புமட்டும் மகிழ்வன்றோ அனைத்தையும் மறந்து

சுற்றுமுற்றும் புதிய உலகே விடுமுறையில்
சற்று விலகும் கவலை வரும்வரையில்
உண்மையில் சொல்லப்போனால் தேவையான ஒன்று
நன்மையே உடலிற்கும் உளத்திற்கும் உண்டு

ஜெயம்
26-07-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading