பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

தீயில் எரியும் எம் தீவு

தீயினால் எரிந்து நாசமாகுமோவென நினைத்தது
நீதியின் நீரூற்றால் பாதியில் அணைந்தது
எப்படியாக இருந்த எம் தாய்த்திருநாடு
இப்படியாகிப் போனதென வருத்தமெல்லாம் மனதோடு

இயற்கை வளங்களாலே அமைக்கப்பட்டதோர் தோட்டம்
தயவின்றியே தற்சார்பில் வாழ்ந்த கூட்டம்
கொஞ்சிவிடும் மகிழ்வாலே வாழ்ந்தவர்தம் நெஞ்சம்
கெஞ்சிவிட உணவிற்கு வந்ததுமேன் பஞ்சம்

மொழி வேறு பேசியதால்
பிரிந்தவர்கள்
வழியொன்றைக் கண்டுகொண்டார் அனுபவித்து அறிந்தவர்கள்
சமத்துவமாய் வாழவென கற்றுக்கொண்டோமோர் பாடம்
சமயமிது சேர்ந்துழைத்தால் முன்னேறும் நம்நாடும்

பிழையான அரசியலால் யுத்தபூமி ஆனதன்று
கொள்ளைக்காரர் கைகளிலே பறியுந்தான் போனதின்று
சரியான ஆள்பார்த்து போட்டிருந்தால் தம்மோட்டை
பரிதவிக்கும் நிலையொன்று சூழ்ந்திராதே தாய்நாட்டை.

ஜெயம்
16-05-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading