20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
ஜெயம் தங்கராஜா
பூக்கும் புத்தாண்டு
பூத்தது புத்தம்புதிய புத்தாண்டு
சேர்ந்தது புதுக்கோலம் பூண்டு
வேண்டாமே இனிமேலும் சந்தேகம்
தோன்றிடும் வாழ்க்கையில் சந்தோசம்
சோகங்கள் மனம்விட்டு தொலையும்
மேகங்கள் அவைபோன்றே கலையும்
நினைத்ததை அடைந்திடும் பேறும்
மனைவந்து அழகாகச் சேரும்
மாற்றங்கள் தினத்திற்குள் பிறக்கும்
ஏற்றத்தின் கதவுகள் திறக்கும்
ஜொலிக்கும் வாழ்க்கை ஊருக்குள்
செழிக்கும் புகழும் பேருக்குள்
நல்லதின் துவக்கமே இதுவாக
இல்லத்தின் குதூகலமும் தெளிவாக
புன்னகை சேர்த்திடும் புத்தாண்டு
மன்னிலே வந்தது வெற்றியாண்டு
வாழ்க்கையை கொண்டாடும் தொடக்கம்
ஏழ்மையை கட்டாயம் முடக்கும்
விரும்பியதெல்லாம் விரைந்துமே கிடைக்கும்
நிரம்பியே நிம்மதி மனதினைப்படைக்கும்
மதங்களற்ற மாதம் பிறக்கட்டும்
சிதைந்து சாதிகள் இறக்கட்டும்
திக்கெட்டும் அன்பு பொங்கட்டும்
மங்காது மகிழ்ச்சி தங்கட்டும்
ஜெயம்

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...