“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

பூக்கும் புத்தாண்டு

பூத்தது புத்தம்புதிய புத்தாண்டு
சேர்ந்தது புதுக்கோலம் பூண்டு
வேண்டாமே இனிமேலும் சந்தேகம்
தோன்றிடும் வாழ்க்கையில் சந்தோசம்

சோகங்கள் மனம்விட்டு தொலையும்
மேகங்கள் அவைபோன்றே கலையும்
நினைத்ததை அடைந்திடும் பேறும்
மனைவந்து அழகாகச் சேரும்

மாற்றங்கள் தினத்திற்குள் பிறக்கும்
ஏற்றத்தின் கதவுகள் திறக்கும்
ஜொலிக்கும் வாழ்க்கை ஊருக்குள்
செழிக்கும் புகழும் பேருக்குள்

நல்லதின் துவக்கமே இதுவாக
இல்லத்தின் குதூகலமும் தெளிவாக
புன்னகை சேர்த்திடும் புத்தாண்டு
மன்னிலே வந்தது வெற்றியாண்டு

வாழ்க்கையை கொண்டாடும் தொடக்கம்
ஏழ்மையை கட்டாயம் முடக்கும்
விரும்பியதெல்லாம் விரைந்துமே கிடைக்கும்
நிரம்பியே நிம்மதி மனதினைப்படைக்கும்

மதங்களற்ற மாதம் பிறக்கட்டும்
சிதைந்து சாதிகள் இறக்கட்டும்
திக்கெட்டும் அன்பு பொங்கட்டும்
மங்காது மகிழ்ச்சி தங்கட்டும்

ஜெயம்

Nada Mohan
Author: Nada Mohan