“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

ஜெயம் தங்கராஜா

பூக்கும் புத்தாண்டு

பூத்தது புத்தம்புதிய புத்தாண்டு
சேர்ந்தது புதுக்கோலம் பூண்டு
வேண்டாமே இனிமேலும் சந்தேகம்
தோன்றிடும் வாழ்க்கையில் சந்தோசம்

சோகங்கள் மனம்விட்டு தொலையும்
மேகங்கள் அவைபோன்றே கலையும்
நினைத்ததை அடைந்திடும் பேறும்
மனைவந்து அழகாகச் சேரும்

மாற்றங்கள் தினத்திற்குள் பிறக்கும்
ஏற்றத்தின் கதவுகள் திறக்கும்
ஜொலிக்கும் வாழ்க்கை ஊருக்குள்
செழிக்கும் புகழும் பேருக்குள்

நல்லதின் துவக்கமே இதுவாக
இல்லத்தின் குதூகலமும் தெளிவாக
புன்னகை சேர்த்திடும் புத்தாண்டு
மன்னிலே வந்தது வெற்றியாண்டு

வாழ்க்கையை கொண்டாடும் தொடக்கம்
ஏழ்மையை கட்டாயம் முடக்கும்
விரும்பியதெல்லாம் விரைந்துமே கிடைக்கும்
நிரம்பியே நிம்மதி மனதினைப்படைக்கும்

மதங்களற்ற மாதம் பிறக்கட்டும்
சிதைந்து சாதிகள் இறக்கட்டும்
திக்கெட்டும் அன்பு பொங்கட்டும்
மங்காது மகிழ்ச்சி தங்கட்டும்

ஜெயம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading