இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 615

உலகாளும் நட்பே

வாழ்க்கையில் நீ தோற்காமல் இருக்கவேண்டுமா
நல்ல நண்பனைத் தேடு
சோதனைகளால் வரும் வேதனைகளையும் சாதனைகளாக்க
நல்ல நண்பனைத் தேடு
உன்னை உயர்த்தியும் விடும் விழும்போது தாங்கிபிடிக்கும்
நல்ல நண்பனைத் தேடு
அர்த்தமுள்ள வாழ்க்கையை அற்புதமாக வாழவேண்டுமா
நல்ல நாண்பனைத் தேடு

நட்பைக் கொண்டுபார் மன அழுத்தங்கள் உன் வாழ்க்கையில் உள்நுழையாது
மனதைக்கீறி புதையும் அவமான விதைகளால் கவலைச் செடிகளும் விளையாது
கள்ளங்கபடமற்ற ஒரு பரிசுத்த உ றவே தோழமை அதை அனுபவிக்காமல் இறக்காதே
நீ அழும்போது உனக்காகவேண்டி ஒருவன் அழுவான் அவனை உன் வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்த மறக்காதே

நட்பு என்பது அழியாச் செல்வம் நிலையில்லா வாழ்க்கையின் அந்த நிலைக்கும் சொத்தை சேமித்துவிடு
அதுவொரு விசித்திர உலகம் அதற்குள் சஞ்சரிப்பவன் மண் ஜென்மத்தின் அதிஷ்டசாலியாவான்
வாழ்க்கையை திரும்பிப்பார் நீ நண்பரோடு கழித்த காலங்களிலேயே குதூகலங்கள் கூடுகட்டியிருக்கும்
எச்சரிக்கிறேன் தோழமையை ஏற்காது வெறுமையாக வாழ்பவர்கள்
வாழவே தகுதியற்றவர்கள்

உணர்வை ஆளும் உயிரை ஆளும் உறவை ஆளும் உலகை ஆளும் நட்பு
மிகவும் வித்தியாசமானது உதவியென்றால் உயிரைக்கூடக் கொடுக்கத் தயங்காதது மகத்தானது நட்பு
பிறப்பு முதற்கொண்டு இறப்புவரை சிறப்பைத்தருவது தூய்மை நட்பு
எத்தனையோ உறவுகளிருக்கும் அத்தனை உறவுகளிலும் உன்னதமானது இறை சன்னிதியானது நட்பு

ஜெயம்
26-07-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading