பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

Kavi 634
போதையின் பாதையின் வாதை

அடிமுதல் நுனிவரை ஆடுது உலகம்
குடித்திடும் மாந்தரால் குடிக்குள்ளே கலகம்
எடுத்துமே சொன்னாலும் ஆயிரம் விளக்கம்
அடிமையானோர் அடிமையாக மயக்கத்தின் பழக்கம்

புத்தியைக் கெடுத்து மரியாதை கெடுக்குமது
சிந்தையை சிறைப்படுத்தி வாழ்க்கையை சீரழிக்குமது
சத்தியத்தைச் செய்துவிட்டு தப்பைச் செய்யுமது
சொத்தை அழிக்கவைத்து ஓட்டாண்டி ஆக்கிவிடுமது

குடிப்பவருக்கே தெரியாது வாழ்க்கையைக் குடிக்கும்
குடிபெயரா பழக்கமாகி காலத்திற்கும் பிடிக்கும்
படிப்படியாய் கரைந்துகொண்டு கல்லீரலும் துடிக்கும்
முடியாத நிலைதள்ளி மரணத்தில் முடிக்கும்

உழைக்கும் ஒருநாள் கூலியைக் கொண்டு
அழையா விருந்ததாம் மதுவினை உண்டு
களைப்பை போக்கிடும் ஒளடதம் என்று
பிழைப்பது தொடரலாமா நிம்மதியைக் கொன்று

கசந்த திரவத்தைக் குடித்து மயங்குவது
நிசத்தை புரிந்துகொண்டால் தீரும் மயக்கமது
உசத்தியாக நினைக்குமது விஷத்திற்கு சமமானது
வசப்படுத்திய குடிவிட்டால் கூடாதோ சுகமானது

ஊர் உலகிற்கெல்லாம் காட்சிப் பொருளாகி
பார்ப்பவர் கண்களிற்கெல்லாம் இவர் கோமாளி
சேர்ப்பார்களில்லை தெரு நாய்களிற்கு பங்காளி
யாரிவரோ பூமிவிட்டு சீக்கிரமாயிவர் காலி

குடும்பம் மனைவி குழந்தைகுட்டிகள் இங்கே
நடுரோட்டில் குடும்பத்தலைவன் குடிமகனாக அங்கே
தடுமாறி தள்ளாடியபடியே தந்தையவர் அங்கே
கொடுமையிது தனயனுக்கும் வரலாமோ இங்கே

அஞ்சாது துணிந்து அயலட்டம் மறந்து
கஞ்சாவைப் புகைத்து சிறகின்றிப் பறந்து
பிஞ்சிலே பழுத்து விடுகாலியாய்த் திரிந்து
கொஞ்சியவரையும் தள்ளி வாழ்க்கையில் பிரிந்து

அளவுகடந்தே போதைப்பொருட்கள் உலவும் தேசமிது
பழகவைத்து சீர்குலைத்தே செய்யும் நாசமிது
களவு வன்கொடுமைகள் பண்பை கேள்விக்குறியாக்குமிது
இளையவர் பாதையில் போதைப்பழக்கம் தப்பாயது

அடுத்த சந்ததியையும் சீரழிக்கும் போதைகலாச்சாரம்
தடுத்ததை நிறுத்தும் பொறுப்பு எமைச்சாரும்
கெடுத்திட வைக்காது எம்மினப் பேரும்
எடுத்துச் சொல்லிடுவோம் போகாது தொலைதூரம்

ஜெயம் தங்கராஜா
14-12-2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading