இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மொழி

அடையாளம் ஒன்றை இனத்திற்குத் தருவது
படைத்திடப் படைத்திட ஊறியே வருவது
உடைமை இதுவெனவாகி உயிராகவே மாறுவது
தடையின்றியே அறிவை அள்ளியள்ளித் தருவது

பெற்றவளை அம்மாவென அழைக்க எழிலாவது
கற்பனைகள் கொப்பளிக்க வார்த்த்தைகளாய் விழுவது
சிற்றறிவை பேரறிவாக்கி தத்துவங்களாய்ப் பேசவைப்பது
கற்றுவிடக் கற்றுவிட பண்டிதனாய் ஆக்குவது

சிந்திக்க வைப்பதென்பதும் மொழியின் வல்லமையே
சொந்த புத்தியைத் தருவதும் இதனாளுமையே
ஐந்தறிவிலிருந்து ஆறறிவோரை வேறுபடுத்திக் காட்டுவதுமிதே
சந்தத்துடன் எழுதவும் பேசவும் பரிசானதே

இலக்கணமும் இலக்கியமும் இதற்குள்ளே அடங்கும்
உலகம் இதில் ஏழாயிரத்தை அடக்கும்
இலகுவாக நாவினால் உருவாகிடும் ஒன்று
அழகான சொற்களாக பிரசவிக்கும் நன்று

இது அமுதானது தேனானது சுவையானது
அதுவே நிறைவானது மறையானது இறையானது
முதுமை மொழியைக் கொண்டவர்க்கோர் பெருமையே
புதுமைத் திறனும் மொழியினுடைய அருமையே

ஜெயம்
28-02-2023

https://linksharing.samsungcloud.com/hHqNBNF3NdHE

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading