” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மொழி

அடையாளம் ஒன்றை இனத்திற்குத் தருவது
படைத்திடப் படைத்திட ஊறியே வருவது
உடைமை இதுவெனவாகி உயிராகவே மாறுவது
தடையின்றியே அறிவை அள்ளியள்ளித் தருவது

பெற்றவளை அம்மாவென அழைக்க எழிலாவது
கற்பனைகள் கொப்பளிக்க வார்த்த்தைகளாய் விழுவது
சிற்றறிவை பேரறிவாக்கி தத்துவங்களாய்ப் பேசவைப்பது
கற்றுவிடக் கற்றுவிட பண்டிதனாய் ஆக்குவது

சிந்திக்க வைப்பதென்பதும் மொழியின் வல்லமையே
சொந்த புத்தியைத் தருவதும் இதனாளுமையே
ஐந்தறிவிலிருந்து ஆறறிவோரை வேறுபடுத்திக் காட்டுவதுமிதே
சந்தத்துடன் எழுதவும் பேசவும் பரிசானதே

இலக்கணமும் இலக்கியமும் இதற்குள்ளே அடங்கும்
உலகம் இதில் ஏழாயிரத்தை அடக்கும்
இலகுவாக நாவினால் உருவாகிடும் ஒன்று
அழகான சொற்களாக பிரசவிக்கும் நன்று

இது அமுதானது தேனானது சுவையானது
அதுவே நிறைவானது மறையானது இறையானது
முதுமை மொழியைக் கொண்டவர்க்கோர் பெருமையே
புதுமைத் திறனும் மொழியினுடைய அருமையே

ஜெயம்
28-02-2023

https://linksharing.samsungcloud.com/hHqNBNF3NdHE

Nada Mohan
Author: Nada Mohan