மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மொழி

அடையாளம் ஒன்றை இனத்திற்குத் தருவது
படைத்திடப் படைத்திட ஊறியே வருவது
உடைமை இதுவெனவாகி உயிராகவே மாறுவது
தடையின்றியே அறிவை அள்ளியள்ளித் தருவது

பெற்றவளை அம்மாவென அழைக்க எழிலாவது
கற்பனைகள் கொப்பளிக்க வார்த்த்தைகளாய் விழுவது
சிற்றறிவை பேரறிவாக்கி தத்துவங்களாய்ப் பேசவைப்பது
கற்றுவிடக் கற்றுவிட பண்டிதனாய் ஆக்குவது

சிந்திக்க வைப்பதென்பதும் மொழியின் வல்லமையே
சொந்த புத்தியைத் தருவதும் இதனாளுமையே
ஐந்தறிவிலிருந்து ஆறறிவோரை வேறுபடுத்திக் காட்டுவதுமிதே
சந்தத்துடன் எழுதவும் பேசவும் பரிசானதே

இலக்கணமும் இலக்கியமும் இதற்குள்ளே அடங்கும்
உலகம் இதில் ஏழாயிரத்தை அடக்கும்
இலகுவாக நாவினால் உருவாகிடும் ஒன்று
அழகான சொற்களாக பிரசவிக்கும் நன்று

இது அமுதானது தேனானது சுவையானது
அதுவே நிறைவானது மறையானது இறையானது
முதுமை மொழியைக் கொண்டவர்க்கோர் பெருமையே
புதுமைத் திறனும் மொழியினுடைய அருமையே

ஜெயம்
28-02-2023

https://linksharing.samsungcloud.com/hHqNBNF3NdHE

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading