சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

சுடர்

மாயிருள் போர்வையை அகற்றி விடும்
பேயிருக்கும் கண்டு இதனை போயிருக்கும்
ஞாயிறு உண்டாக்கிடும் பகலை செங்கதிரால்
தேயினும் உருக்கி பெருக்கிவிடும் நிலவும்

சோதிமயமானவரே இந்த பிரபஞ்ச நாயகன்
ஆதி முதலாய் முன்னோர்களின் இறை
மோதினால் சருகுகளை பஸ்பம் ஆக்கிவிடும்
மேதினியின் செல்வமே இருளகற்றும்  விளக்கு

ஒரு பொருள் உருக வேண்டுமானால்
பெருக வேண்டும் ஒளியும் அதனால்
துருவப் பனியும் மெழுகனவே கரையும்
திருமந்திரத்திலும் இருக்கின்றது அக்கினியின் உரையும்

உள்சூடும் மிகுந்தால் உடம்பும் இளைத்துவிடும்
இல்லாமல் வெப்பம் செரிமானமும் பசியுமில்லை
தொல்லை தரவெனவே குளிரும் அடம்பிடிக்கும்
சொல்வேனொன்று சுடர் இரையாகின்றது இறையுமாகின்றது

ஜெயம்
09-04-2023

Nada Mohan
Author: Nada Mohan