நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச
வாழ்த்தும் வந்து வாழ்த்துமே

வித்தியாசமான சிந்தனைகள் இதனைக்கேட்டே உதித்தது
சத்தியமாய்ச் சொல்லுகின்றேன் சிந்தைக்குள் வசித்தது
செந்தமிழும் நாப்பழக்கமாக கவிதைகளாய்க் குதித்தது
சந்தத்தோடு பாக்களை பாடச்சொல்லி விதித்தது

குழைத்து தமிழமுதை ஊட்டிடவே மொய்த்தார்கள்
முளைத்துவிடும் செவ்வாய்க்குள் அதிசயங்கள் செய்தார்கள்
நுழைந்தவர்கள் இதனுள் முகவரியைப் பெற்றார்கள்
தலையெடுத்து புதுப் பாவலராய் அடையாளப்பட்டார்கள்
ஈர்நூறு வாரமாய்ப் பிறப்பதைக் கண்டு
பாரங்கேபார் சுவைத்தவர் புகழ்ந்திட என்று
வார்த்தை பூமாலையை அணிவித்தே இன்று
ஆர்ப்பரித்தே அகமகிழ்வார் தேன்வண்டாகிக் கொண்டு

நிகழ்ந்துகொண்டு இருக்கின்றது இருநூறாவது அற்புதம்
புகழ்ந்துமே கொண்டாடி பாராட்டும் விதம்
அகமுருக்கும் பாவரசின் சொல்லின் இதம்
சுகுமுரசும் உள்ளமுரைக்கும் நன்றிதனை நிதம்

ஜெயம்
15/11/2022

Nada Mohan
Author: Nada Mohan