சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஜெயம்

ச.சி. ச

மீண்டு எழு

கலங்கி நிற்பதால் உண்டோ நன்மை
விளங்கிக் கொண்டால் புரியும் உண்மை
வழிகள் இங்கு ஆயிரம் உண்டு
பழியை போடாது முனவைது நன்று

உடநை்த மேகங்களாலே தான் மழை
அடைந்து கிடந்துவிட்டால் மாறுமோ நிலை
இழந்தவைகள் எல்லாமே முக்கியம் தான்
புலம்பிக்கொண்டே இருந்துவிடின் வாழ்க்கையே வீண்

கூட்டின் பூட்டை உடைத்து வெளியேறு
ஆட்டம் ஆட தளங்களிருக்கு நூறு
அழுதே கிடப்பது இனிமேலும் பாவம்
எழுந்து பயணித்தால் மட்டுமே லாபம்

வீழ்ச்சி என்பதிங்கு நிரந்தரம் அல்ல
வாழ்க்கையில் இப்படி எத்தனையைச் சொல்ல
தயங்காது எதற்கும் துணிவோடு நில்
இயற்கையின் நட்பை துணையாக்கிக் கொள்

ஐெயம்
16/10/2023

Nada Mohan
Author: Nada Mohan