முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

கவி : விடியலின் உன்னதம்
03.03.2022

கிழக்கு வெளிக்கும் உன்னதம் கண்டு
உள்ளத்தில் ஒரு படி உற்சாகம் மேவிடும்
நேற்றை பொழுதின் தடங்கல் கையினில்
இன்றைய பொழுதை திறம்பட நகர்த்த
விடியலின் கதிரொளி உன்னத ஊற்று
தூங்கிய புல்லினம் பூவினம் பட்சிகள்
இன்றுதான் பிறந்தோம் என்ற உன்னதம் விடியலில்
அரிதிலும் அரிய உயிர்ப்பிற்கு கதிரவன்
அவனே கருணைக்கு முதல்வன்
விடியலில் அவன் வடிவம் காண்பது
நம் வாழ்விற்கு மலர்வு
போட்டியும் புகழும் ஆதிக்க வெறியும்
நிறைந்த அரசியல் சந்தையில்
நாணயமும் நம்பிக்கையும் வெளிச்சமிட
மனிதம் பிறக்க இன்றைய விடியலும்
நாளைய விடியலும் வெளிச்சத்தை தரட்டும்!!!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading