கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி – துளி நீர்
தங்கசாமி தவகுமார்
24.03.22

அசட்டு தன உலகிற்கு
ஆண்டு தோறும் ஓர் தினம்
எச்சரிக்கை காட்டி வந்து
விழித்து கொள்ள விடியல் தரும்!!!

நமக்கு என்றும் ஆதாரம்
ஆகாய ஆதவனும்
பூலோக புவி மகளுமே
இவற்றுக்கு என்றும் ஆகாரம்
துளி நீர் அதுவே!!!

நீர் இன்றியும் உயிர் போகிறது
மிகையான நீரும்
அழிவை தருகிறது

அதை அதை பகுத்தறிந்து
பக்குவம் பேணுவதே
ஓர் படி அறிவு அதிகம் கொண்ட
மானிடருக்கு துடுப்பு

தேவைக்கு ஏற்ப நீரோடு இணைந்து
நம் தேவைகளை நிறை செய்வோம்

நன்றி
தவகுமார்

Nada Mohan
Author: Nada Mohan