பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி – துளி நீர்
தங்கசாமி தவகுமார்
24.03.22

அசட்டு தன உலகிற்கு
ஆண்டு தோறும் ஓர் தினம்
எச்சரிக்கை காட்டி வந்து
விழித்து கொள்ள விடியல் தரும்!!!

நமக்கு என்றும் ஆதாரம்
ஆகாய ஆதவனும்
பூலோக புவி மகளுமே
இவற்றுக்கு என்றும் ஆகாரம்
துளி நீர் அதுவே!!!

நீர் இன்றியும் உயிர் போகிறது
மிகையான நீரும்
அழிவை தருகிறது

அதை அதை பகுத்தறிந்து
பக்குவம் பேணுவதே
ஓர் படி அறிவு அதிகம் கொண்ட
மானிடருக்கு துடுப்பு

தேவைக்கு ஏற்ப நீரோடு இணைந்து
நம் தேவைகளை நிறை செய்வோம்

நன்றி
தவகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading