சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

” தமிழின் ஞாயிறு “

ரஜனி அன்ரன் (B.A) ” தமிழின் ஞாயிறு ” 18.12.2025

நல்லூர்தந்த ஞானச்சுடர் தமிழின் ஞாயிறு
தமிழ் வளர்த்த சான்றோன்
வல்லதமிழை வளமான சைவத்தை
புராணஆகமத்தை புத்துயிராக்கிய சான்றோன்
மார்கழித் திங்கள் பதினெட்டில்
மாண்புடனே உதித்தாரே மகான் நாவலர் !

ஏட்டுச்சுவடிகளை எல்லாம் தூசுதட்டி
பாட்டாக அச்சேற்றிப் பயன்தந்த பாவலன்
சைவமும் தமிழும் தளைக்கச்செய்து
நாட்டுமக்களின் நல்வாழ்விற்கும்
நன்னெறிக்கும் வித்திட்ட பெருமகன்
பாமரரும் விளங்கும் எளியநடையில்
பாருக்கு புதுநெறி படைத்த பாவலன் !

மொழியின் வளர்ச்சிக்கும் சமய எழுச்சிக்கும்
விழியாகிநின்று ஒளிகொடுத்த வித்தகனை
அழிந்து போகவிருந்த ஓலைச்சுவடிகளை அச்சுருவாக்கி
அரும்பெரும் நூல்களையெல்லாம் ஆக்கியஆசானை
அனுதினமும் போற்றிடுவோம் !

Author: