தலைப்எபு பரவசம்

முன்எடுத்த சந்தக்கவி நிகழ்வு
மூன்றாண்டை தாண்டியதில் மகிழ்வு
இன்நிகழ்வில் பல கவிஞர் இணைவு
இவர் கவிகள் பல வடிவாய் முகிழ்வு
*ஆக்கங்கள் உள்ளத்தால் பூக்கும்
அழகாக கவிக்கு உரு சேர்க்கும்
தாக்கத்தைஉணர்வோடு கோர்க்கும்
சந்தலய கவிதைகளை ஆக்கும்
* வரிவரியாய் கவிக்கனியை பிழிந்து
வானலையில் என் உணர்வை பதிந்து
விரிந்த நிகழ் வால்உறவு மலர்ந்து
விழைந்தேனே நூல் தொகுக்க விரைந்து
*இருபதின்மர் விரும்பி அதில் இணைய
எல்லோர் தம் பங்களிப்பும் நிறைய
விரிந்த தொரு பாமுகப்பூ மலர்ந்து
வினைதிறனின் பெறுபேறாய் சிறந்து
*பேரின்ப நிலை உதிரும் பரவசம்
பெற்றேள் யான் அரியதுர அதிரசம்
ஊரும்உள உணர்வில் எழும் நவரசம்
உளம் உதிர்த்த கவிநூலின் பரவசம்

*

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading