தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே

குறுகிய பாதையில் நீண்டு
தொடரும் மனிதர் வாழ்வோ
மாறி மாறியே அச்சுறுத்தும்
காலநிலை கடலலையோடு
கவலைக் கண்ணீர் படருதே

தினந்தினம் வெவ்வேறு சவால்
மனங்கலங்கும் மழை நீரிலேயே
பெரு வெள்ளம் கனவெறியோடு
துரத்த மண்சரிவுப் புதைகுழியில்

புதைந்த மாந்தரும்,சிதைந்த வீதி
பாதி பிளந்து ஊரோடு ஓடிய நீர் –
ஊற்றும் கூறு போட இரவிரவாக
தூக்கமின்றி சிணுங்கிய சிறுவர்,
அனுங்கிய முதியோரும் தவிக்கும்
நிலைதான் மாறிடுமா? மாறிடுமோ?

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading