” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“திசை காட்டிகள்”

நேவிஸ் பிலிப் கவி இல(149) 03/10/24

பாதைகள் பல கண்டு
நற் பயணம் நாம் தொடர
நல் வழி காட்டிடும்
திசை காட்டிகள்

விடியல் காட்டிடும் ஒளியாய் -நாம்
அகரம் கற்று சிகரம் தொட
எழுத்தாணி காட்டி எம் விரல்
சுழல் விட்ட அச்சாணிகள்

சிதையுண்ட கற்கள் சிலையாதல் போல
அறிவென்னும் உளி கொண்டு
மூடிக் கிடந்த மனத்திரை கிழித்தெறிந்து
இலட்சியமென்னும் முத்திரையை
நெஞ்சிலே பதித்திட்ட சுடரொளிகள்

அறிஞராய் ,கலைஞராய் மருத்துவராய்
பண்டிதராய், பண்பாளராய்
நம்மை வளர்த்தெடுத்த
நல் வழி காட்டிகள்

சான்றோன் என்ற பெயரோடு
மேலோங்கி எங்கோ நாம் நிற்க
ஏற்ற விட்ட ஏணியென
அடுத்த நம் தலைமுறைக்காய்
காத்திருக்கும் எம் ஆசான்கள்

ஆண்டுகள் பல கடந்திடினும்
அழியாப் புகழ் கொண்டிடினும்
நன்றியோடு வாழ்திடுவோம்
அவர் நினைவில் நிறைந்திடுவோம்
நன்றி வணக்கம்
நேவிஸ் பிலிப் (பிரானஸ்)

Nada Mohan
Author: Nada Mohan