திருமணமாம்

மதிமகன்
பெற்றோர் பார்த்த திருமணமாம்
பேசிச் செய்த ஒரு மணமாம்
மற்றோரும் அதற்குச் சம்மதமாம்
மணவறையில் தான் அறிமுகமாம்!

வாழப்போவது ஏனோ இருவருமாம்
வழிமுறை வகுப்பது உறவினராம்
ஆளப்போவ தவர் அன்னையராம்
அண்ணியர் சிலரும் அடக்குவராம்

நாட்டிற்கு நாடது வேறுபடுமாம்
நாகரிகம் முன்னேற ஊறு படுமாம்!
பேட்டுக்கு பேடும் சரிவருமாம்
பேதமை என்றால்,நகை வருமாம்!

செயற்கை புத்தி என்ன தருமோ!
செத்தவரை எழுப்பி சேர்த்து விடுமோ!
இயற்கை வழமையும் தகர்ந்து விடுமோ!
இனியும் திருமணம் வாழ்ந்து விடுமோ!

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading