12
Aug
13.08.2026 கேவலார் புனித பயணம்-2047 ஜெயா நடேசன்
கோடை விடுமுறை அழகாக மலர்ந்தது
பாமுக விடுப்பு...
06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
திருமதி. கலாதேவி பத்மநாதன்
21.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித் தலைப்பு !
“விடியல்”
விடியாத இரவுக்குள் வழிதேடும் குருடர்களாய் விடியலுக்காய் காத்திருந்து பூத்திருந்த விழிகளிரண்டு
ஒடிந்த சிறகுடனே ஓயாது ஓலமிடும்
ஒருபறவை இருதேசம் இறுதிக்காய் காத்திருக்கு
இடிகூட தாங்கிடலாம் இல்லை சொந்தநாடு இந்தசொல்லை மட்டும் தாங்க முடியலையே
மடிமீது தாங்கிய மண்வாசம் மாறவில்லை
படிப்படியாய்
வாழவைத்த பாவிதேசம் மறக்கவில்லை
படிந்த ஏக்கமுடன்
புதியபாதை தேடுகிறோம் முடிந்தவரை போராடியும் முன்னுரிமை பெறவில்லை
துடிதுடித்து துன்பப்பட்டோம் துரோகச் செயலாலே கடிந்துகொள்ள உறவில்லை
காலம்பதில் சொல்லட்டுமே
விடியும்நாளை வாசகமோ இன்றுவரை விடியவில்லை
முடியுமோ வினாவிற்கு
முற்றுபுள்ளி வைப்பாரில்லை
நன்றி வணக்கம்
கலாதேவி பத்மநாதன்
ஈழத் தமிழர் வளாகம்.
இந்தியா
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...