திருமதி -சிவமணி புவனேஸ்வரன்

***பாமுகம்***
பரவிட தமிழிசை பர்வதக் காற்றலை
உரசிட உணர்வினில் உள்ளத்தின் உவகையில்
வரமதாய் வாழ்வில் வளமதை வழங்கிட
பரவசம் பரவசம் பாமுகம் பாரினில்

முரசுகள் முழங்கிட முத்தமிழ் நாயகர்
சிரசினில் தாங்கி சிந்தையில்
போற்றிட
கரங்களைஇணைத்தே காவியம் கண்டிட
தரமதில் தனித்துவ தாரகை ஆனதே

வெள்ளி மிளிர்வில் வெண்ணிலா ஒளிர்வில்
பள்ளிச் சிறாரெல்லாம் பாகுதமிழ் கற்றிட
அள்ளி அமுதமொழி அன்னையாய் தந்திட்ட
துள்ளிடும் இன்பஒலித் தூயவள் வாழியவே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading