10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
திருமதி சிவமணி புவனேஸ்வரன் .சுவிஸ்
சந்தம் சிந்தும் வாரம் 201
தலைப்பு:
***கனவு மெய்ப்பட
வேண்டும்***
இலைமறையாய் இலங்குமந்த ஈழம் தன்னில்
இல்லாமை இல்லாத நிலைமை வேண்டும்
சோலைகளே எங்கெங்கும் செழிக்க வேண்டும்
கோலமயில் அங்காடிக் களிக்க வேண்டும்
மாலைகளில் மான்துள்ளிப் பாய வேண்டும்
மாதரும் மகிழ்வாக வாழ வேண்டும்
சேலைகளைப் பெண்ணுடுத்தி நடக்க வேண்டும்
செந்தமிழில் சொல்லெடுத்துப் பாட வேண்டும்
ஆலைகளும் ஆங்காங்கே அமைக்க வேண்டும்
ஆணினமும் பெண்ணினமும் உழைக்க வேண்டும்
பாலையும் பொழிகின்ற பசுக்கள் வேண்டும்
பால்பருக பசிதாகம் தீர வேண்டும்
சாலையோரம் கதிராடிக் களிக்க வேண்டும்
சாமைநெல்லும் சாகுபடி ஆக வேண்டும்
காலைமணி ஓசையினால் காலம் எல்லாம்
கதிரெழவும் கலைஞானம்
பெருக வேண்டும்.
*———–*

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...