தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

திருமதி சிவமணி புவனேஸ்வரன் .சுவிஸ்
சந்தம் சிந்தும் வாரம் 201
தலைப்பு:

***கனவு மெய்ப்பட
வேண்டும்***

இலைமறையாய் இலங்குமந்த ஈழம் தன்னில்
இல்லாமை இல்லாத நிலைமை வேண்டும்

சோலைகளே எங்கெங்கும் செழிக்க வேண்டும்
கோலமயில் அங்காடிக் களிக்க வேண்டும்

மாலைகளில் மான்துள்ளிப் பாய வேண்டும்
மாதரும் மகிழ்வாக வாழ வேண்டும்

சேலைகளைப் பெண்ணுடுத்தி நடக்க வேண்டும்
செந்தமிழில் சொல்லெடுத்துப் பாட வேண்டும்

ஆலைகளும் ஆங்காங்கே அமைக்க வேண்டும்
ஆணினமும் பெண்ணினமும் உழைக்க வேண்டும்

பாலையும் பொழிகின்ற பசுக்கள் வேண்டும்
பால்பருக பசிதாகம் தீர வேண்டும்

சாலையோரம் கதிராடிக் களிக்க வேண்டும்
சாமைநெல்லும் சாகுபடி ஆக வேண்டும்

காலைமணி ஓசையினால் காலம் எல்லாம்
கதிரெழவும் கலைஞானம்
பெருக வேண்டும்.
*———–*

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading