” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
இல 18

*இலக்கு*

ஒற்றுமை ஓங்கிடல் வேண்டும்
ஒன்றாகி நின்றிடல் வேண்டும்
பற்றுடன் வாழ்ந்திடல் வேண்டும்
பல்கலை வளர்த்திடல் வேண்டும்

கற்றுணர்வு பெருக்கிடல் வேண்டும்
கருணையை காட்டிடல் வேண்டும்
முற்றும் முயன்றிடல் வேண்டும்
முழுமைக்கும் உழைத்திடல் வேண்டும்

நற்றவம் இயற்றிடல் வேண்டும்
நன்னெறி ஒழுகிடல் வேண்டும்
மற்றுயிர் மதித்திடல் வேண்டும்
மண்வளம் காத்திடல் வேண்டும்

பெற்றோரை காத்திடல் வேண்டும்
பெரியோரை மதித்திடல் வேண்டும்
உற்றோர்க்கு உதவிடல் வேண்டும்
உறவைப் பேணுதல் வேண்டும் .

Nada Mohan
Author: Nada Mohan