மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

***** இயற்கை அழகு *****

வானத்து வான்முகில்கள் வாரிவரும்
மாமழை
தேனகத்து சோலைகளாம் தேசத்தின்
கானகம்
நின்றுநீந்தும் மீன்கள் நீலக்கடல்
மன்றில்
குன்றுகளின் ஊடாய் குதிக்கின்ற
அருவி
தென்றல் ஆகி வருமே தெம்மாங்கு
காற்று
வண்டு இசைந்து பாடும் வசந்தத்தின்
பூக்கள்
உண்டு களித்தேறும் ஊர்க்குருவி
வானம்
பண்டு இசை கேட்கும் பச்சைவயல்
கழனி
அண்டம் ஆளுகின்ற ஆதவனின்
அழகும்
என்றும் எம்மையாளும் இயற்கை
இன்பம் தானே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading