” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

* ** இல்லற இன்பம்.****

அன்பர் இருவர் அணையும் இல்லறம்
அன்பு மலர்களின் அழகிய சங்கமம்
இன்பத் தலைவன் இயற்றும் செல்வம்
இனிய தலைவி இயக்கும் இல்லம்

மலரில் மணமோ மாறுதல் இல்லை
நிலவில் ஒளியோ நீங்குதல் இல்லை
உலவும் சூரியன் உறங்குதல் இல்லை
குலவும் வாழ்வில் குறைகளும் இல்லை

பின்னும் செல்வம் பிள்ளை என்றாகும்
பிரியம் பெருக்கி பேற்றைக் கொடுக்கும்
வன்மம் இல்லா வாழ்வும் வளரும்
வசந்தம் ஆகி வாசம் பரப்பும்

உண்மைக் காதல் உலகில் வாழ
கண்ணில் காவியக் காட்சி ஆகி
மண்ணில் பணிகள் பரவச் செய்து
பண்பாய் வாழுமே பாசமலராய்.

Nada Mohan
Author: Nada Mohan