தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

**** சிந்தை நிறைக்கும் சிவராத்திரி***

எந்தை ஈசன் எம்பெருமானை
சிந்தை நிறைத்து சிவராத்திரியில்
வந்தனை செய்ய வரம்பல பெருகும்
முந்தை வினையும் முழுதும் அறுமே

சிவனுக்கே உகந்த திருநாள் தேடி
தவமதாய் இருந்து தலங்கள் நாட
அவனருள் பெருகும் அகந்தை அழியும்
பவமதும் நீங்கும் பரமுத்தி கிட்டும்

ஒருநாள் இரவு முழுதும் விழித்து
பெருமான் புகழின் பெருமை சொல்லி
அருவுருவான அருட்பெரும் ஜோதியின்
திருவருள் காணும் தினம் இதுவன்றோ .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading