கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

******பெண் என்னும் பேரொளி*****

தன்னலம் காணாத் தரணித் தாரகை
தன்நிகர் இல்லாத் தனித்துவத் தேவதை
இன்னல் கதவை இறுகப் பூட்டி
இன்பம் கதவை அகலத் திறப்பவள்

பின்னே சாதனை அறுவடை காணவே
முன்னே விதைகளை முனைந்து விதைப்பவள்
அன்பெனும் அகல்விளக்கை அனுதினம் ஏற்றி
அருளை ஒளியாய் பரவச் செய்பவர்

எழுவாளே ஏந்திழை ஏற்றங்கள் காண
வழுவிலா அறங்களை வளர்த் தெடுத்து
பழுதிலா உலகை பாருக்குத் தந்து
மெழுகாய் உருகி மேதினி காப்பவள்

மலரும் மலர்களாம் மங்கையர் மண்ணில்
உலவும் நிலவாய் உலா வருபவர்
கலகம் இல்லாது காசினி காக்கும்
நலம் தரும் நாயகி நாளும் வாழ்கவே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading