12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
*** பட்டினி***
உருண்டு ஓடும் உலக வாழ்வினில்
உவகை ஒழிந்து ஓடக் கண்டோம்
திரண்டு நாளும் திரவியம் வாங்க
தேடித் தேடி நிதம் அலைகின்றோம்
இருண்டே போகுமோ எங்கள் நாடும்
இல்லாமை என்றும் இருப்பிடம் ஆகுமோ
வரண்டே போகுமோ எங்கள் வயிறும்
வாழ்வும் இதுவே என்றே ஆமோ
குட்டிக் குழந்தைக்கு குடிக்க கொடுக்க
புட்டிப்பால் இல்லாப் புவனம் பிறந்தது
தட்டுப்பாடு தரம்தரமாய் பெருக
கட்டுப்பாட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓட
தேடிய தேட்டம் ஓடி ஒழிந்து
கோடி விலையால் கொள்ளை போகுதே
வாடிய மனங்கள் வலு இழக்க
ஆடியே வாழ்வும் ஆட்டம் காணுதே
பண்டைய கால வாழ்வை ஆக்கி
பழுதிலா நிலத்தை உழுது விதைத்து
அண்டை அயலவரை அணைத்து எடுத்து
ஆக்கம் ஆக்கி அல்லல் ஒழிப்போம்
பண்டம் மாற்றி பகிர்ந்து உண்போம்
கண்டத்தே இருந்து கடன் நோக்காமல்
அண்ட வாழ்வில் ஆக்கம் சமைப்போம்.

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...