திருமதி சிவமணி புவனேஸ்வரன்

****இலைதுளிர்காலம் ****

மெல்லிய விடியலில் மேதினி ஒளிர்வில்
சில்லெனும் காற்றில் சிலிர்க்கும் தளிரிடை,
அல்லல் நீங்கிய அதிகாலைப் நடையிடை
சொல்லியம் காணாச் சுகங்கள் தந்ததே

மலையிடை தாண்டி மகிழ்வாய்த் தவழும்
சலசல அருவி சந்தம் சேர்த்திட
சிறகுகள் விரிக்கும் சின்னக் குருவிகள்
பறக்கும் பொழுதில் பண்ணிசை பாடின

உதயம் காணும் உதய சூரியன்
இதயம் ஏற்க இலங்கும் பொழுதிடை
நிறநிற பூக்கள் நிறைந்து கிளையிடை
நறைகளைத் தாங்கி நறுமணம் தந்தன

வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட வசந்தம்
எண்ணத்தில் கவி களை ஏற்றிடச் சொன்னன
மண்ணிடை மக்கள் மனதினில் இயற்கை
கண்ணினில் இன்பம் காட்சிகள் ஆகுதே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading