திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*****ஆடிப்பட்டம் தேடிவிதை*****

காலம் கனிந்திருக்கு கண்மணிகாள் வாருங்கடி
கூலம் விதைத்திடலாம் கூடி குலவுங்கடி
ஞாலம் விரிந்திருக்கு நல்மணியை நாட்டுங்கடி
வேலன் துணையிருப்பான் விரும்பி விதையுங்கடி
ஓலம் நமக்கேதடி ஒற்றுமை ஓங்குகையில்
பாலம் அமைத்திடலாம் நாம் பகிர்ந்துண்டு வாழ்ந்திடலாம்
ஆலமரத்தடியே நாம் ஆறிக் களைப்பாறலாம்
சீலமுறவாழ்ந்திடலாம் சீர்செல்வம் சேர்த்திடலாம்
கோல மரிக்கொழுந்தின் குலக்கொடிகாள்
வாருங்கடி
காலமிது கனிந்திருக்கு கண்மணிகள்
வாருங்கடி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading