” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*****ஆடிப்பட்டம் தேடிவிதை*****

காலம் கனிந்திருக்கு கண்மணிகாள் வாருங்கடி
கூலம் விதைத்திடலாம் கூடி குலவுங்கடி
ஞாலம் விரிந்திருக்கு நல்மணியை நாட்டுங்கடி
வேலன் துணையிருப்பான் விரும்பி விதையுங்கடி
ஓலம் நமக்கேதடி ஒற்றுமை ஓங்குகையில்
பாலம் அமைத்திடலாம் நாம் பகிர்ந்துண்டு வாழ்ந்திடலாம்
ஆலமரத்தடியே நாம் ஆறிக் களைப்பாறலாம்
சீலமுறவாழ்ந்திடலாம் சீர்செல்வம் சேர்த்திடலாம்
கோல மரிக்கொழுந்தின் குலக்கொடிகாள்
வாருங்கடி
காலமிது கனிந்திருக்கு கண்மணிகள்
வாருங்கடி

Nada Mohan
Author: Nada Mohan