திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்.
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*சாதனை*

அடிமை விலங்கை உடைத்திடவும்
அறிவும் ஊட்டிக்
கொடுத்திடவும்

அழகாய் உலகை
ஆண்டிடவும்
அல்லல் அற்று வாழ்ந்திடவும்

அன்பின் ஊற்றால் அழகாய் உலகை
அனைவரும்
நிறைக்க வாருங்கள்

வன்பே இல்லா வாழ்வில் பூக்கும்
பாச மலரைப் பாருங்கள்

நைந்தே உருகிய நைற்றிங் கேளும்
நலமாய் உலகை
காத்தாரே
கைகள் தாங்கிய
அன்னை திரேசா
கருணை மழையை
பொழிந்தாரே

அன்பாம் விளக்கை
அழகாய் ஏந்தி
அருளாம் ஒளியைத்
தந்தாரே

வேதனை தீர்க்க விழித்தே எமக்கோ
போதனைப் பொருளும்
ஆனாரே
சோதனை பலவும்
கண்ட போதும்
சாதனை உலகைப்
படைத்தாரே

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading