பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்.
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*சாதனை*

அடிமை விலங்கை உடைத்திடவும்
அறிவும் ஊட்டிக்
கொடுத்திடவும்

அழகாய் உலகை
ஆண்டிடவும்
அல்லல் அற்று வாழ்ந்திடவும்

அன்பின் ஊற்றால் அழகாய் உலகை
அனைவரும்
நிறைக்க வாருங்கள்

வன்பே இல்லா வாழ்வில் பூக்கும்
பாச மலரைப் பாருங்கள்

நைந்தே உருகிய நைற்றிங் கேளும்
நலமாய் உலகை
காத்தாரே
கைகள் தாங்கிய
அன்னை திரேசா
கருணை மழையை
பொழிந்தாரே

அன்பாம் விளக்கை
அழகாய் ஏந்தி
அருளாம் ஒளியைத்
தந்தாரே

வேதனை தீர்க்க விழித்தே எமக்கோ
போதனைப் பொருளும்
ஆனாரே
சோதனை பலவும்
கண்ட போதும்
சாதனை உலகைப்
படைத்தாரே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading