திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்.
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*சாதனை*

அடிமை விலங்கை உடைத்திடவும்
அறிவும் ஊட்டிக்
கொடுத்திடவும்

அழகாய் உலகை
ஆண்டிடவும்
அல்லல் அற்று வாழ்ந்திடவும்

அன்பின் ஊற்றால் அழகாய் உலகை
அனைவரும்
நிறைக்க வாருங்கள்

வன்பே இல்லா வாழ்வில் பூக்கும்
பாச மலரைப் பாருங்கள்

நைந்தே உருகிய நைற்றிங் கேளும்
நலமாய் உலகை
காத்தாரே
கைகள் தாங்கிய
அன்னை திரேசா
கருணை மழையை
பொழிந்தாரே

அன்பாம் விளக்கை
அழகாய் ஏந்தி
அருளாம் ஒளியைத்
தந்தாரே

வேதனை தீர்க்க விழித்தே எமக்கோ
போதனைப் பொருளும்
ஆனாரே
சோதனை பலவும்
கண்ட போதும்
சாதனை உலகைப்
படைத்தாரே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading