” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*மொழி*

வாய்மொழி நின்றே வழிவழி ஆகி
வனப்புகள் கண்ட வண்டமிழே
தாய்மொழி எனவே தவமெனப் பெறவே
தரணியில் உதித்த தமிழணங்கே
பாய்ந்திடும் இன்ப பாட்டிசை ஒலியில்
பனித்திடும் இன்ப பைந்தமிழே
நோய் எனத் தவித்தால்
நொடியில் வந்தே
நேயம் காட்டும் நிறைமொழியே
தாயவள் மடியில் தாலாட் ஒலியில்
தங்கும் இன்ப தமிழமுதே
தூயவளாகி துலங்கி நின்றே
துளிர்த்தே தளிர்ப்பாய்
தீந்தமிழே

Nada Mohan
Author: Nada Mohan