பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

22/03/2022
எனதருமைச் சகோதரியின் பிறந்தநாள்
நினைவில்

என்னுயிர் நீயன்றோ
“””””””””””””””””
என்னரும் அழகே என்னுயிர் நீயே
பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே
இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
என்முகம் காட்டிய என்னுடன் பிறப்பே
கன்னலுன் வார்த்தை கனவிலும் காணேன்
பின்னொரு பிறவி பிரியா வாழ்க்கை
தன்னிகர் இல்லாத் தாயாய் வருக
பன்னெடுங் காலம் பாசமாய் வாழ
அன்புடன் உனக்கே அனைத்தும் நல்கிட
உன்பிறப் பிங்கே உவந்திட வருகவே.

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.

எனதருமைச் சகோதரியின்
நினைவில்

என்னுயிர் நீயன்றோ
“””””””””””””””””
என்னரும் அழகே என்னுயிர் நீயே
பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே
இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
என்முகம் காட்டிய என்னுடன் பிறப்பே
கன்னலுன் வார்த்தை கனவிலும் காணேன்
பின்னொரு பிறவி பிரியா வாழ்க்கை
தன்னிகர் இல்லாத் தாயாய் வருக
பன்னெடுங் காலம் பாசமாய் வாழ
அன்புடன் உனக்கே அனைத்தும் நல்கிட
உன்பிறப் பிங்கே உவந்திட வருகவே.

.

Nada Mohan
Author: Nada Mohan