திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏

வியாழன் கவி – 102

தலைப்பு – சித்திரையே வாவா

சித்திரையே வாவா சிறப்புடன் வாவா
முத்திரை பதிக்க முழுமதியாய் வாவா
இத்தரையில் நிம்மதியை இன்பமாக்க வாவா
சிந்தையில் சிறப்புடன் பிறக்கட்டும் எண்ணங்கள்.

எட்டுதிசையும் போராட்டம் எல்லையற்ற விதிமீறல்
ஏழு ஸ்வரங்களும் மனித கண்ணீரில்
ஏன் இந்த ஏமாற்றம் மனிதன்னிடத்தில்
ஏழையின் பட்டினி அதிகாரவர்க்கத்துக்கு புரியாதா?!.

சித்திரைப் பெண்னே தனியுமா இந்நிலை
யாத்திரை செல்லவும் யாகங்கள் செய்யவும்
நித்திரையில் மரணங்களை தடுக்க வாவா
நம்மதியை நிலைநாட்ட சித்திரையே வாவா.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
20/04/2023

Nada Mohan
Author: Nada Mohan