தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!! கவிதை-2311 தண்ணீருக்காய்த் திரளும் போர் மேகங்கள்..!! ஆழக்கடலைக் கடக்கின்ற அத்தனை கப்பல்களும் அள்ளிக் கொணரும் நமக்காய் அத்தியாவசியப் பொருட்களை.. அந்தோ...

Continue reading

தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர் மண்ணிற்கும் விண்ணுக்குமே மழை நீரில் ஏணிகட்டி குதூகல கொண்டாடத் தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள் தாகம் சுழலும்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்..

வசந்தா ஜெகதீசன் தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள்... வரட்சி நிலைபோக்கிடுமே வளமது திரண்டிடுமே கார்மேகக் கறுக்கலிலே கனமழை பெய்திடுமே காரியத்தின் சித்திகளும் கைகூடும்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 201

தலைப்பு — யாதுமாகி நிற்கின்றாள் எம்மன்னை

வறுமை வாட்டுவதால் வலிமை விரட்டுவதால்
உருவாகும் துயரை உண்மையைக் கண்டு
விருப்போடு வழிபடுவோர் வளம்பெற வழிகாட்ட
நறுமலராய் யாதுமாகி நிற்கின்றாள் எம்மன்னை.

துயரங்கள் தீர்ந்திட துன்பங்கள் நீங்கிட
உயர்வுக்காய் உள்ளன்போடு அம்பிகையை வழிபட்டு
பயமின்றி பசியின்றி பெருமையுடன் வாழ்ந்திட
அபயகரம் நீட்டுவாள் அம்பிகை அடியார்க்கு.

ஓயாமல் துயரில் ஒலமிடும் எம்மவர்க்கு
தாயாகக் கரம்நீட்டி காத்திடுவாள் எம்மன்னை
ஓயாது ஓரணியாய் உள்ளன்பொடு வழிபட்டால்
தீயவற்றைத் தீயிலிட்டு தேடுவதைத் தந்திடுவாள்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(19/11/2022)

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading