பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி.பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 158

தலைப்பு — வானொலி வானில் மலர்ந்த மலர்கள்.

வாரந்தோறும் வானொலி வானில் மலர்ந்த
ஈரமுடை அழகுறு எழில்நிறை மலர்களால்
சீராகச் சேர்த்தமைத்த சிறப்புறு பாமாலைக்கு
பாராட்டுச் சொல்லெடுத்துப் பாட்டாய் எழுதுகிறேன்.

குவிந்திட்ட கவிதைகளுல் கணிந்தவற்றைக் கண்டெடுத்து
சுவைத்திட எமக்காய் சோர்வின்றி உழைத்து
உதவிய கரங்களை அமைதியுடன் வாழ்த்துகின்றேன்
புவியில் கவிவாழ கவிஞர்களும் வாழ்கவென.

காலத்தைக் குறுத்துக் காட்டும் கவிதைகள்
நானிலத்தில் உலாவுவதற்கு நூல்கள் துணையாவதுபோல்.
வாழ வழிகாட்டும் வளமான கவிதைகள்
வாழ்வதற்கு நல்ல நூல்வடிவம் பெறவேண்டும்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
18/01/2021

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading