அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

திருமதி.பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 158

தலைப்பு — வானொலி வானில் மலர்ந்த மலர்கள்.

வாரந்தோறும் வானொலி வானில் மலர்ந்த
ஈரமுடை அழகுறு எழில்நிறை மலர்களால்
சீராகச் சேர்த்தமைத்த சிறப்புறு பாமாலைக்கு
பாராட்டுச் சொல்லெடுத்துப் பாட்டாய் எழுதுகிறேன்.

குவிந்திட்ட கவிதைகளுல் கணிந்தவற்றைக் கண்டெடுத்து
சுவைத்திட எமக்காய் சோர்வின்றி உழைத்து
உதவிய கரங்களை அமைதியுடன் வாழ்த்துகின்றேன்
புவியில் கவிவாழ கவிஞர்களும் வாழ்கவென.

காலத்தைக் குறுத்துக் காட்டும் கவிதைகள்
நானிலத்தில் உலாவுவதற்கு நூல்கள் துணையாவதுபோல்.
வாழ வழிகாட்டும் வளமான கவிதைகள்
வாழ்வதற்கு நல்ல நூல்வடிவம் பெறவேண்டும்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
18/01/2021

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading