“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

” துளிர்ப்பாகும் வசந்தம் “

ரஜனி அன்ரன் (B.A) “ துளிர்ப்பாகும் வசந்தம் “ 03.04.2025

வண்ணக் கதிரவன் ஒளிவீச
வாடையும் மெல்ல விலகிட
தருக்களெல்லாம் கருக்கொள்ள
மொட்டுக்கள் முகையவிழ்த்து
மலர்வனமாய் வனப்பூட்டும் வசந்தம்
மனதிற்கு மகிழ்வூட்டும் தருணம் !

வசந்தம் துளிர்ப்பானால்
வாழ்வு முழுமையும் புதுமையே
துளிர்க்கும் இலைகளும் இசைபாட
துள்ளிக் குதிக்குமே மனமும்
பச்சை கனிந்து மலர
இச்சை கொள்ளுமே மனமும் !

பனித்துளிகள் மலர்களை நனைக்க
பட்சிகள் இராகம் இசைக்க
மலர்கள் திறந்து முகம்காட்ட
மழைத்துளியும் மலர்களை முத்தமிட
பூமகள் மேனியைப் பூக்களும் அழகாக்க
மேதினியே ஜொலிக்குது வசந்தத்தாலே
துளிர்ப்பாகும் வசந்தம்
நல்மனங்களை வனப்பாக்கட்டும் !