சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

தேவன் திரு

எத்தனை எத்தனை ஆற்றல்களை!
எம்தலைவன் படைத்து நின்றான்
அத்தனை ஆற்றல்களும் மொத்தமாய்
மொளனித்தபடி கிடக்க
எவன் எவனே கைகள் ஓங்கி
எம் இனத்தின்
அழிவிற்கான ஆற்றல்கள்
வளர்த்துக்கொண்டே போகிறது.

கடந்தகாலங்களை
கட்டுப்பாடாய் கண்ணியமாய்
கடந்த எங்களுக்கு
இன்று நடக்கும் அவலங்கள்
ஆன்மாவையே உலுப்புகின்றது.

கொலைகளுக்குள்ளும்
கொள்ளைகளுக்குள்ளும்
நிறைந்து கொண்ட ஈழமதில்
நிறைந்த போதையில்
விறைப்பாகி போன உணர்வுகளால்
உறையவைக்கும் சம்பவங்கள்
தினம் தினம் அரங்கேறுகின்றது.

எமை காக்கும் ஆற்றலோடு
எவருமில்லையே இன்று
வலிகளோடு எம்மினம்
நாளும் நலிந்தே போகிறது
இதில் எமக்கான ஆற்றல்களை
நாம் எங்கே வளர்த்து
வாழ்வில் உயர்ந்திட

Nada Mohan
Author: Nada Mohan