ஆரோக்கிய வலுவும் ஆசானங்களும்…

வசந்தா ஜெகதீசன் ஆதிக்கலையாய் அங்கீகாரம் ஆரோக்கிய வாழ்வின் அட்சயம் வழிமுறை நின்றுவலுவுடன் கற்றால் வருமுன் நோயை காத்திடலாகும் ...

Continue reading

18.06.2026 “ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்”ஜெயா.நடேசன்

ஆதிகால சித்தர் ஆரம்பித்த கலையாக பாரத பதஞ்சலி முனிவர் பெயராக உலகமெலாம் பரந்து நிற்கும் நிலையாக ஆனி...

Continue reading

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும் (766) 18.06.2026

செல்வி நித்தியானந்தன் ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும் உடம்பின் வலுவே ஆரோக்கிய பயிற்சி பயிற்சி ஆசனம் எமக்கான வளர்ச்சி நாளும்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைதேவன்

சந்தம் சிந்தும் கவி

பள்ளிப் பருவம்.

பாலராய் துள்ளி குதித்து ஓடிய போது
பாடசாலையில் தூக்கி சென்ற விட்ட முதல் நாள் நினைவு.

அழுது கொண்டு
அம்மா அம்மா
என்று பின்னால் ஓடியது நினைவு
பின்னே சென்றது மனம்.
முன்னே வந்தது பழைய நினைவுத் கவி தலைப்பு……

பள்ளித் தோழிகளுடன் உறவு ஊர்கதைகள்
பேசி, வேலியில் கொய்யா பறித்து,
காய்த்த மாவுக்கு கல் எறிய, நாயும் குரைக்க விடு விடு என்று ஓடிய பருவம் நினைவில்.

காசில்லாமல் செலவு செய்தது,
அம்மாவின் சீலைத்தலைப்பில்
சில்லறை எடுத்து கடலை கச்சான் வாங்கியதும் நினைவாய் நிலலாடுதே.

பள்ளி செல்லாமல்
பஸ்சில் பட்டினம் செல்ல பஸ்சில் ஆசிரியர் வரவும் பயந்த நானும் அம்மாவின் பின்னால் மறைய

ஆசிரியர் வந்து கையை பிடிக்க
அம்மா அழவே ஆசிரியர் தள்ளி போய்விட்டார்

காலை பாடசாலை வகுப்பு செல்ல நானும் தயங்கி கொண்டே நினைவுகள் பல நினைவுக்கு வந்ததே இன்பம்.

ஞாபகம் வந்ததே ஞாபகம் வந்ததே
பாதி வழியில் புளியம்பழம் நாவல் சாப்பிட்ட நினைவும்
ஞாபகம் வந்ததே

தோழிகள் வரும் வரை காத்து நின்று அன்ன நடை நடந்து வகுப்புக்கு பிந்திய போய் அடி வாங்கி யதும் ஞாபகம் வந்ததே.

நன்றி பாவை அண்ணா.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading