நகுலவதி தில்லைத்தேவன்

24.3.22 வியாழன் கவி

துளி நீர் 183.

“நீரின்றி நிலையா உலகு”
“நீர் உயர வரம்பு உயந்தது
ஒருகாலம்.

வனங்களை அழித்து
மரங்களை வெட்டி
வானுயர்ந்த கட்டிடங்கள்
புதிய தொழில் சாலைகள்
கானல் நீருமாச்சு
களனிகளும் வரண்டாச்சு.

கண்டும் காணாத பொறுப்பற்ற
அரசாங்கம்

பொழியும் துளி நீரும்
கடலில் கலக்குதே

விழும் மழை நீரை சேர்த்து
வையத்தை காத்திடுவோம்.

அதிபருக்கும் நகுலா சிவநாதனுக்கும் தொடரும் வாணிக்கும் சிவதஷசினிக்கும்
வாழ்த்துக்கள் நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan